Thursday, April 05, 2007

இட ஒதுக்கீட்டை கண்டுபிடித்தவர்கள்!!!

இட ஒதுக்கீடு என்பது ஏதோ 100 வருடங்களாகத்தான் இருக்கிறது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதைக்கண்டுபிடித்தது அம்பேத்காரோ, மண்டல் கமிஷனோ, அர்ஜூன் சிங்கோ என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இட ஒதுக்கீடு 5000 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் உள்ளது

பிராமண வம்சத்தாரும், சத்திரிய வம்சத்தில் அரச குடும்பத்தினருக்கும் மட்டுமே குருகுலங்களில் 100 சதவீத இடஒதுக்கீடு இருந்துள்ளது. கடந்த 100 வருடங்களாகத்தான் அதை கொஞ்சம் மாற்றியுள்ளோம்.

Labels:

Wednesday, December 20, 2006

உணர்ச்சிவசப்படாதீர்கள் வலைப்பதிவர்களே!!!

சாந்தி விஷத்தில் எல்லாருமே உணர்ச்சி வசப்பட்டுதான் பதிவு போடுகிறார்கள். சாந்தி என்ற பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக அவரும் பெண்தானே பெண்ணாகத்தானே பிறந்தார். அவர் சாதித்தது சாதித்ததுதான், ஹிந்து *** தின்னும் பத்திரிக்கை என்று ஓவரா உணர்ச்சி வசப்படாதீர்கள்.

ஹிந்து முத்லான பத்திரிக்கைகள் சாந்திக்கு ஆதராவாகத்தான் எழுத வேண்டும். இந்தியர் என்பதால் அவருக்குத்தான் சார்பாக எழுத வேண்டும் என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்? வித்தியாசமான செய்திகள் முதல்பக்கத்தில் வருவது தவறில்லை. இந்த பாலின சோதனை செய்தி பற்றி மற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு வருவதும் தேவைதான்.

ஹிந்து கூறியது போல சாந்தி ஏற்கனவே ரயில்வே துறையால் பாலின சோதனையில் முடிவு தெரிந்தும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டது குற்றம். அறியாமையால் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் இந்த விஷயம் தெரிந்த அவரது பயிற்சியாளர் முதலியானோர் குற்றவாளிகள்.

சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது.

Thursday, December 07, 2006

நீங்கள் அமைச்சரானால்...! கட்டுரைப் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி!

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையம் தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்காக மெகாபரிசுகளுடன் ஒரு போட்டியை நடத்த முன்வந்திருக்கிறது. இந்த இணையத்தள நிர்வாகிகள் சத்தமில்லாமல் பல சமூகசேவைகளை ஏற்கனவே தமிழகத்தில் செய்து வருகிறார்கள்.

சென்னையில் பாவணர் பெயரில் அமைந்த தமிழ்வழி பள்ளிக்கூடம் சில சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டபோது, மீண்டும் கட்டடம் கட்ட இந்த இணைய உரிமையாளர் நிதி வழங்கியிருந்தார். இருளர் இனத்தைச் சேர்ந்த ஏழைமாணவிகள் சிலருக்கு கல்விபயில நன்கொடை கொடுத்திருந்தார். அயல்நாட்டில் பணிபுரியும் அவர் விடுமுறையில் தமிழகம் வரும்போது இதுபோல ஏராளமான சேவைகளை செய்து வருகிறார்.

இணையம் மூலமாகவும் களத்தில் இறங்கியும் சேவை செய்துவரும் அந்த தமிழர் தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்போது கல்லூரி பயிலும் மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப் போட்டி நடத்தி பரிசும் வழங்க முன்வந்திருக்கிறார். கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தலைப்பு:
உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?

பங்குபெறுவதற்கான தகுதிகள்:
+2 மேற்படிப்புப் படிப்பவராக/முடித்து 3 ஆண்டுகளுக்குள் இருத்தல் வேண்டும்.
கட்டுரை கூடியவரை தமிழில் இருத்தல் வேண்டும்.

1 பக்கத்தில்
பெயர்
விலாசம்
பிறந்த திகதி
பால்
படிக்கும்/படித்த துறை
----------------
1 பக்கத்தில்
படிக்கும்/படித்த துறை வேறாயின் இத்துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்.

1 அல்லது 2 பக்கத்தில்
கட்டுரையின் சுருக்கம்.

5 - 8 பக்கங்களில்
ஆதாரங்களுடனான கட்டுரை

-------------------

கட்டுரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி திகதி: March 31, 2007
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் திகதி: 2007ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு
பரிசு வழங்கப்படும் திகதி: பின்னர் அறிவிக்கப்படும்

பரிசுகள்:முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: ரூ2,000 (20)

அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
#67 - 5th Lane
Chennai-39

தொலைபேசி இலக்கம்: 044-45561101

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் இங்கே பதியுங்கள்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
பதிலளிக்கப்படும்.


பயன்படக்கூடிய இணைப்புக்கள் & விடயங்கள்:
கீழ் தரப்பட்டுள்ள இணையத்திலுள்ள தமிழ்ப் பக்கங்களைப் பார்வையிடுவதற்கு TAM-Kalaignar மற்றும் TAMLKamban
எழுத்துருக்கள் தேவை.

தமிழ்நாட்டு வரவு/செலவு களை அறிய
தமிழ்நாடு அரசின் இணையத்தளம் - தமிழில்
தமிழ்நாடு அரசின் இணையத்தளம் - ஆங்கிலத்தில்

Monday, November 27, 2006

இணைய கட்டுக்கதைகள்

* இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இது. இந்த மெயிலை நீங்கள் எத்தனை பேருக்கு பார்வட் செய்கிறீர்களோ அந்தனை பைசாவை ஒரு தொண்டு நிறுவனம் எங்களுக்கு வழங்கும்.

* நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கியதும் சொன்ன வார்த்தை அல்லாஹீ அக்பர். அவர் பூமி திரும்பியதும் இஸ்லாமுக்கு மாறி விட்டார்.

* சுனாமில் காணமல் போன குழந்தை இது. கண்டவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

* டெல்லி சினிமா தியேட்டரில் எயிட்ஸ் ஊசி

இது போன்ற பார்வர்டட் மெயில்கள் நமக்கு தினமும் வரும். இதில் 90% இணைய கட்டுக்கதைகள் என்று தெரியாமல் பலர் மெயிலை அனைவருக்கும் அனுப்பி விடுவார்கள். இவைகளை அடையாளம் காணுவதற்கென்றே இணைய தளங்கள் இருக்கின்றன.

http://urbanlegends.about.com

http://snopes.com

இது போன்று ஏதேனும் மின்னஞசல் உங்களுக்கு வந்தால் இந்த தளத்தில் தேடிப்பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அம்மாஞ்சியாக அனைவருக்கும் பார்வர்ட் செய்து விடாதீர்கள்

Thursday, October 19, 2006

தமிழை வளர்க்கிறோமா?

தமிழை வளர்க்கிறோம் என்று ஆளாளுக்கு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் ஒருவரும் தமிழை செறிவூட்ட முனைவதில்லை? அதாவது புதிய தேவையான எழுத்துக்களைச் சேர்ப்பது. இலக்கண விதிகளை சரி செய்வது போன்றவைகள்.

நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது என்பதால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா? ஒரு இலட்சிய மொழியின் எழுதுவடிவம் என்பது, எல்லாவிதமான ஒலிகளையும் பதிப்பதற்குறிய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளை ஒப்பிடும்போது, தழிழில் அவ்வாறு வசதி குறைவுதான்.

உதாரணமாக பெரும்ப்பாலும் அனைத்து மொழிகளிலும் உபயோகிக்கும், ஜ், ஹ், ஷ் போன்ற எழுத்துக்கள் இன்னும் தமிழில் சேர்க்கப்படவில்லை. இன்னும் அவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்லியே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றையும் தமிழில் சேர்த்துக்கொள்ளலாமே. ஏற்கனவே வடமொழி எழுத்துக்களை, அதன் உருவத்தை மாற்றித்தான் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் ஆங்கிலமொழியின் சில உச்சரிப்புகளைக்கூட தமிழில் சரியாக எழுதமுடியாது. உதாரணமாக CAT (பூனை) என்ற உச்சரிப்பை தமிழில் எழுத முடியாது. 'கேட்' என்றுதான் எழுத வேண்டும். 'ABRAHAM' என்ற பெயரை தமிழில் ஆபிரகாம் என்றுதான் எழுதமுடியும். அதாவது ஒரு வெளிநாட்டவரின் பெயரை அவர் மொழியில் உள்ள உச்சரிப்பில் எழுதிவைக்க முடியாது. அதற்காக ஏதாவது புது எழுத்துக்களை அறிமுகப்படுத்த முனையலாம். உதாரணமாக CAT - க-அட் ABRAHAM- அ-அப்ரஹ-அம்(இது ஒரு உதாரணம்தான், நாம் முயன்றால் மிகச்சிறந்த முறையில் இதற்கு தீர்வு காணலாம்.)


இப்பதிவின் எனது நோக்கம் என்னவென்றால், நாம் உபயோகிக்கும் வீடு, உடைகள், பொருட்கள் என அனைத்தையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறோம், ஆனால் நாம் உபயோகிக்கும் மொழியை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறோம். இதற்கு காரணம் என்னவாக இருக்குமென்றால், நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட மொழியை, தெய்வத்திற்கு இணையாக வைத்ததுதான்.

நமக்காகதான் மொழியேயன்றி, மொழிக்காக நாம் அல்ல! மொழி சுயம்புவாக தோன்றியதல்ல. நாம்தான் உருவாக்கினோம், நாம்தான் அதை செறிவூட்ட வேண்டும். அல்லாவிடில் காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்கா முடியாமல் அழிந்துவிடும். பெரியார் பல எழுத்து சீர்திருத்தங்களைச் செய்தார். அதே போல இப்பொதும் எப்படி தமிழை மேம்படுத்தலாம், ஆங்கிலத்தை விட எப்படி எளிமைப்படுத்லாம் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதை விடுத்து 'தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று முழங்குவது வெறும் உணர்ச்சிகளைத்தூண்டவே பயன்படும்.